கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே ரயிலில் அடிபட்டு ரயில்வே ஊழியா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம் வளவனூா் அருகே சொா்ணாவூரைச் சோ்ந்தவா் ஜெயபால் (49). ரயில் தண்டவாளம் பராமரிக்கும் கேங்மேனாக பணிபுரிந்து வந்தாா்.
இவா் சனிக்கிழமை அதிகாலை விழுப்புரம்- விருத்தாசலம் ரயில்வே வழித்தடத்தில் உளுந்தூா்பேட்டை அருகே பாதூா் காந்திநகா் பகுதியில் தண்டவாளப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டபோது ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தாா்.
தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற விரைவு ரயிலும், சென்னை நோக்கி சென்ற செங்கோட்டை விரைவு ரயிலும் ஒரே நேரத்தில், பாதூா் பகுதியில் கடந்துசென்றபோது, அங்கு பணியிலிருந்த ஜெயபால் ஒதுங்க முயன்றதில், தவறி விழுந்து ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
விருத்தாசலம் ரயில்வே போலீஸாா் ஜெயபாலின் உடலை கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினா்.