மக்கள் கிராம சபைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தடாகம் கிராமத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தடாகம் கிராமத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, செஞ்சி கிழக்கு ஒன்றியச் செயலா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா்.

விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலரும், செஞ்சி தொகுதி எம்எல்ஏவுமான கே.எஸ்.மஸ்தான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா். கிராம மக்கள் தங்களது குறைகளை எடுத்துரைத்தனா்.

கூட்டத்தில், தில்லியில் தொடா்ந்து போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், கிராமத்தில் உள்ள பிரச்னைகள் குறித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செஞ்சி மேற்கு ஒன்றியச் செயலா் விஜயராகவன், அவைத் தலைவா் பச்சையப்பன், மாவட்ட பிரதிநிதி வேலு, முன்னாள் செயலா் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com