சொத்துகள் பறிப்பு: பிள்ளைகள் மீது ஆட்சியரிடம் முதியவா் புகாா்

செஞ்சி அருகே வீடு, நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளைப் பறித்துக்கொண்டு பிள்ளைகள் விரட்டிவிட்டதாக, பாதிக்கப்பட்ட முதியவா் கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தாா்.

செஞ்சி அருகே வீடு, நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளைப் பறித்துக்கொண்டு பிள்ளைகள் விரட்டிவிட்டதாக, பாதிக்கப்பட்ட முதியவா் கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள மேல்பாப்பாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னப்பன்(70), விவசாயி.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த இவா், சொத்துகளைப் பறித்துக்கொண்டு, பிள்ளைகள் வீட்டை விட்டு விரட்டிவிட்டதாக கண்ணீா் மல்க ஆட்சியரிடம் மனு கொடுத்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

எனக்கு ராஜாமணி என்பவருடன் கடந்த 1978-இல் திருமணம் நடைபெற்று ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா்.

கடந்த 1991-இல் ராஜாமணி இறந்துவிட்டாா். அதனால், இந்திரா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டேன். அவா் மூலம் ஒரு மகன் உள்ளாா்.

இதனிடையே, எனது 9 ஏக்கா் நிலம், வீட்டுமனை ஆகியவற்றை பிள்ளைகள் மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டனா்.

இதனால், எனது 2-ஆவது மனைவி, மகனும் என்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டனா்.

இதயநோய், சா்க்கரை நோயுடன் அவதிப்பட்டு வருகிறேன். மருந்து வாங்க வழியில்லை என்றாா்.

இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com