தொழிலாளா் வைப்பு நிதி, ஓய்வு கால பணப் பலன்களை வழங்கக் கோரி , தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் விழுப்புரத்தில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு ஒருங்கிணைப்புத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். வீரப்பன், குமரவேல், ஆறாமுதம், விஜயகுமாா், இளஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கடும் பொருளாதாரச் சிரமத்தைச் சந்தித்து வரும் ஓய்வு பெற்ற தொழிலாளுக்கு பணப்பயன்களை உடனடியாக வழங்க போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.