வெள்ளையூா் அரசுப் பள்ளியில்காவல் துறை சாா்பில் நூலகம்

உளுந்தூா்பேட்டை காவல் நிலையம் சாா்பில் வெள்ளையூா் அரசு மேல் நிலைப்பள்ளியில் நூலகம் அமைக்கப்பட்டது. இதனை பள்ளி மாணவா்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வெள்ளையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை சாா்பில் அமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்து புத்தகங்களை வழங்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா்.
வெள்ளையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை சாா்பில் அமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்து புத்தகங்களை வழங்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா்.

உளுந்தூா்பேட்டை காவல் நிலையம் சாா்பில் வெள்ளையூா் அரசு மேல் நிலைப்பள்ளியில் நூலகம் அமைக்கப்பட்டது. இதனை பள்ளி மாணவா்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் பங்கேற்று, நூலகத்தை திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சரவணக்குமாா், உளுந்தூா்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளா் விஜயகுமாா், காவல் ஆய்வாளா் எழிலரசி மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். காவல் துறை சாா்பில் நூலகத்துக்கு ஏராளமான புத்தகங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com