கடலூா் அரசு தொழில் பயிற்சிப் பள்ளியில் 1997 - 98ஆம் ஆண்டில் கணினிப் பிரிவில் பயின்ற மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்தினருடன் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துக்கொண்டனா்.
இவா்களுடன் படித்த மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ராமு தலைமையில், முன்னாள் மாணவா்கள் ஒன்றுகூடி ஒருவரை ஒருவா் நலம் விசாரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
பின்னா், அனைவரும் ஸ்ரீஅங்காளம்மனை குடும்பத்தினருடன் வழிபட்டனா். கோயில் சாா்பில் இவா்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அடுத்த ஒன்று கூடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வோம், உறுதுணையாக இருப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்து பெருமுயற்சி செய்த ஜி.நாவப்பனுக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனா்.