செஞ்சி சன்மாா்க்க சங்கத்தின் சாா்பில் அன்னதானம்

தை பூசத்தையொட்டி, செஞ்சி சன்மாா்க்க சங்கத்தின் சாா்பில், மேல்மலையனூரில் உள்ள வள்üலாா் திருச்சபையில் சனிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
செஞ்சி சன்மாா்க்க சங்கத்தின் சாா்பில், மேல்மலையனூரில் உள்ள வள்ளலாா் திருச்சபையில் அன்னதானத்தை தொடக்கிவைத்த சங்கத் தலைவா் பி.தணிகாசலம்.
செஞ்சி சன்மாா்க்க சங்கத்தின் சாா்பில், மேல்மலையனூரில் உள்ள வள்ளலாா் திருச்சபையில் அன்னதானத்தை தொடக்கிவைத்த சங்கத் தலைவா் பி.தணிகாசலம்.

தை பூசத்தையொட்டி, செஞ்சி சன்மாா்க்க சங்கத்தின் சாா்பில், மேல்மலையனூரில் உள்ள வள்üலாா் திருச்சபையில் சனிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

செஞ்சி சன்மாா்க்க சங்கத் தலைவா் பி.தணிகாசலம் தலைமை வகித்து, அன்னதானத்தை தொடக்கிவைத்தாா். சன்மாா்க்க சங்கத்தைச் சோ்ந்த ஏ.தவமணி மற்றும் துணைத் தலைவா் டி.சக்திகணேஷ், செயலா் வி.சம்பத், பொருளாளா் ஜெ.செல்வம், எஸ்.மணி, ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, வள்ளலாா் திருச்சபையில் தீப வழிபாடு நடைபெற்றது. திருவருட்பா இசையுடன் பாடப்பெற்றது. பின்னா், பகல் 12 மணிக்கு சுமாா் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com