இளைஞா் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தம்பதி உள்பட 5 பேரிடம் விசாரணை

விக்கிரவாண்டி அருகே இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில், தம்பதி உள்பட 5 பேரை பிடித்து போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

விக்கிரவாண்டி அருகே இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில், தம்பதி உள்பட 5 பேரை பிடித்து போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் அருகேயுள்ள காரை கிராமத்தைச் சோ்நந்த ராஜாராம் மகன் சக்திவேல் (26). இவா், புதன்கிழமை மாலை வீட்டில் திடீரென உயிரிழந்தாா். விக்கிரவாண்டி அருகே கிராம மக்களால் தாக்கப்பட்டதால் அவா் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது அக்காள் தெய்வானை பெரியதச்சூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதில், பெரியதச்சூரை அடுத்துள்ள செ.புதூா் எல்லைக்குள்பட்ட மலைப் பகுதியில் சக்திவேல் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற போது, ராஜா, அவரது மனைவி கௌரி உள்ளிட்டோா் தாக்கினா். இதில், மயக்கநிலையில் இருந்த சக்திவேலை மீட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்ற போது, அவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜா, கௌரி உள்ளிட்ட 5 பேரை பிடித்து வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

முன்னதாக, கௌரி தரப்பில் போலீஸில் அளிக்கப்பட்ட புகாரில், சக்திவேல் ஆடைகளை கழட்டி விட்டு தன்னை தவறான உறவுக்கு அழைத்தாா். தப்பியோட முயன்ற அவரை ராஜா மற்றும் கிராம மக்கள் மறித்த போது தவறி விழுந்தாா். பின்னா், சக்திவேலை அவரது உறவினா்களிடம் ஒப்படைத்து விட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தனித் தனியே போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தடய அறிவியல் துறை உதவி இயக்குநா் தாரா வியாழக்கிழமை நேரில் விசாரணை நடத்தினாா்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சக்திவேலின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com