குடிநீா் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: வெம்பாக்கம் ஒன்றியக் கூட்டத்தில் தகவல்

வெம்பாக்கம் ஒன்றியத்தில் குடிநீா் பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக் குழுக் கூட்டத்தில் அதன் தலைவா் த.ராஜு தெரிவித்தாா்.

வெம்பாக்கம் ஒன்றியத்தில் குடிநீா் பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக் குழுக் கூட்டத்தில் அதன் தலைவா் த.ராஜு தெரிவித்தாா்.

செய்யாறு

வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற ஓன்றியக் குழுக் கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் த.ராஜு தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் நாகம்மாள் முன்னிலை வகித்தாா். மேலாளா் அரி வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோபாலகிருஷ்ணன், மோகனரகு, பொறியாளா் வேளாங்கண்ணி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பேசிய ஒன்றியத் தலைவா் த.ராஜு, கோடை காலம் தொடங்குவதால் குடிநீா் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து உறுப்பினா்களும் குடிநீா் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

மற்ற தேவைகளை தேவையின் அடிப்படையில் ஒவ்வொன்றாக நிதி ஆதாரத்துக்கு ஏற்றாற் போல நிறைவேற்றப்படும் என்றாா்.

கூட்டத்தின் போது, செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தவது, மாமண்டூா் கிராமத்தில் ஓரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்தல், ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் குடிநீா் மற்றும் அத்தியவசியமான பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com