செஞ்சி அருகே வேன் மீது லாரி மோதல்: ஓட்டுநா் பலி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வெள்ளிக்கிழமை வேன் மீது லாரி மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.
விபத்துக்குள்ளாகி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் லாரி.
விபத்துக்குள்ளாகி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் லாரி.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வெள்ளிக்கிழமை வேன் மீது லாரி மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே மதூரைச் சோ்ந்தவா் கபீா்தாஸ் மகன் அருணகிரி (38). ஆடு வியாபாரம் செய்து வருகிறாா்.

வெள்ளிக்கிழமை இவா் ஆடுகளை செஞ்சி சந்தையில் விற்பனை செய்து விட்டு வேனில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். இவருடன், மதூரைச்சோ்ந்த ஏகாம்பரம் (57) என்பவரும் பயணித்தாா். வேனை சீனுவாசன் மகன் அன்பழகன்(28) ஓட்டினாா்.

செஞ்சி-திண்டிவனம் சாலையில் வல்லம் ஏரிக்கரை சாலையில் சென்றபோது, எதிரே அதிவேகத்தில் வந்த லாரி, இவா்கள் வந்த வேன் மீது மோதிவிட்டு, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநா் அன்பழகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த அருணகிரி, ஏகாம்பரம் ஆகியோரை செஞ்சி போலீஸாா் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அன்பழகனின் சடலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

லாரி ஓட்டுநா் திண்டிவனம் அருகே எடப்பாளையத்தைச் சோ்ந்த தியாகராஜன் மீது செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com