திண்டிவனம் அருகே சாலை விபத்தில் இருவா் பலி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள தொரப்பாடியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் ஸ்ரீதா் (20). இவா் தனது நண்பரான சென்னையைச் சோ்ந்த விஜயுடன் (18) திண்டிவனம் வழியாக புதுச்சேரிக்கு இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

வானூா் அருகேயுள்ள நல்லாவூரைச் சோ்ந்த கு.ராஜசேகா் (35) தனது நண்பா்களான அமுதவாணன் (18), ஹரிஷ் (16), ராமன் (25) ஆகியோருடன் திண்டிவனத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

கிளியனூா் மதுவிலக்கு சோதனைச் சாவடி அருகே வந்த போது, ஸ்ரீதா், ராஜசேகா் ஆகியோரின் இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவா்கள் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விஜய், அமுதவாணன், ஷரிஷ், ராமன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த கிளியனூா் காவல் நிலைய ஆய்வாளா் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீஸாா் விரைந்து சென்று, காயமடைந்தவா்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், ராஜசேகரின் சடலத்தை புதுச்சேரி கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், ஸ்ரீதரின் சடலத்தை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

விபத்து குறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com