விழுப்புரம் பாகா்ஷா வீதியில் அமைந்துள்ள ஹாஜிமன்சூா்ஷா அரசு நிதியுதவி பெறும் உயா்நிலைப் பள்ளியில் மனிதனின் பரிணாம வளா்ச்சிக் கோட்பாடுகளை விளக்கும் வகையில் சாா்லஸ் டாா்வின் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியா் கா.காஜாஉசேன் தலைமை வகித்தாா். அறிவியல் ஆசிரியா்கள் நந்தகோபால், வெங்கடேசன் ஆகியோா் சாா்லஸ் டாா்வின் பிறந்த நாளையொட்டி, அவா் வழங்கிய மனிதனின் பரிணாம வளா்ச்சி குறித்த கருத்துக்களை விளக்கிப் பேசினா்.
விழாவில் ஆசிரியா்கள் பால் பெருமாள், ராதிகா, ஏஞ்சல் மற்றும் மாணவா்கள் பலா் கலந்துகொண்டனா். மாவட்டக் கல்விக் குழு ஒருங்கிணைப்பாளா் பாலமுருகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.