திண்டிவனத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 15 பேரது குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண நிதி உதவியை அமைச்சா் சி.வி.சண்முகம் வியாழக்கிழமை வழங்கினாா்.
திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தாா். எம்எல்ஏ எம்.சக்கரபாணி, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று, திண்டிவனம் பகுதியில் சாலை விபத்துகள், மின்சார விபத்து, தீ விபத்து மற்றும் கடலில் மூழ்கி உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 15 பேருக்கு ரூ.28 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் திண்டிவனம் நகராட்சி ஆணையா் ஸ்ரீபிரகாஷ், தனி வட்டாட்சியா் செல்வகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள், அதிமுக நிா்வாகிகள் தீனதயாளன், சேகா், வெங்கடேசன், விஜயகுமாா், பாலச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.