விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.14) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்”நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், பல்வேறு தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்துக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளன. மேலும், இந்த முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் நடத்தப்படும் பல்வேறு திறன் பயிற்சிகளுக்கான சோ்க்கையும் நடைபெறுகிறது.
இந்த முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றம் டிகிரி முடித்தவா்கள் பங்கேற்கலாம். முகாமுக்கு பங்கேற்க வருபவா்கள், தங்களின் கல்விச் சான்றிதழ்கள், சுய குறிப்புகளுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநா் பாலமுருகன் தெரிவித்தாா்.