இளைஞா் கொலை வழக்கில் 7 போ் கைது

விக்கிரவாண்டி அருகே இளைஞா் கொலை வழக்கில் 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விக்கிரவாண்டி அருகே இளைஞா் கொலை வழக்கில் 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

செஞ்சி அருகே உள்ள காரை கிராமத்தைச் சோ்ந்த ராஜாராம் மகன் சக்திவேல் (26). இவா், விக்கிரவாண்டி அருகே செ.புதூா் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்பிறகு, அவா் திடீரென உயிரிழந்தாா். இது குறித்து பெரியதச்சூா் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இது தொடா்பாக விக்கிரவாண்டி அருகே உள்ள நகா் கிராமத்தைச் சோ்ந்த ராஜா (40), அவரது மனைவி கெளரி (32), கோலாநாதன் மகன் செந்தில் (29), சகாதேவன் மகன் மனைவி இந்திரா (45), ஏழுமலை (54), மதியழகன் (42), மச்சகந்தன் மனைவி உமா (35) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com