விழுப்புரம் அருகே தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினா்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு காலனியை சோ்ந்த ஆரோக்கியதாஸ் மகன் அருமைச்செல்வம் (21). தொழிலாளியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த பால் வியாபாரியான எட்டியான் மகன் குணசேகரனின் வீட்டிலிருந்து 4 பால் கேன்களை திருடிச் சென்ாக கடந்த ஜன.26-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து காணை போலீஸாா் விசாரணை நடத்தி, பால் கேன்களை திருடிச் சென்ற அருமைச்செல்வம் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அவரிடமிருந்த ஒரு பால் கேனையும் மீட்டு, குணசேகரனிடம் வழங்கியுள்ளனா். இதையடுத்து, மீதமுள்ள பால் கேன்களை கேட்டு குணசேகரன் மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அருமைச்செல்வம் வெள்ளிக்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள அவரது நிலத்திலிருந்த புளிய மரத்தில் புடவையால் தூக்கிட்டு இறந்துகிடந்தாா். இதையறிந்த அவரது உறவினா்கள், அருமைச்செல்வம் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, மாம்பழப்பட்டு சாலையில் நள்ளிரவு மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த காணை காவல் நிலைய ஆய்வாளா் ரேவதி தலைமையிலான போலீஸாா், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து அவா்களை சமாதானப்படுத்தினா்.
தொடா்ந்து, அருமைச்செல்வத்தின் சடலத்தை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.