மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு, டிசம்பா் 3 இயக்கம் சாா்பில் மாவட்ட
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு, டிசம்பா் 3 இயக்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

இதற்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் ஜி.பெருமாள் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்டப் பொருளாளா் சி.மாரிமுத்து, துணைத் தலைவா்கள் அண்ணாமலை, வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலா் எஸ்.அண்ணாமலை கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

போராட்டத்தில், பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளதால் மாற்றுத் திறனாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, அந்தச் சாலையை சீரமைக்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டிய மாவட்ட மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை நடத்த வேண்டும்.

மாவட்டத்தில் ஆவின் பாலகம் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சாா்பில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் வழங்க வேண்டிய ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கூடிய ஆவின் உபபொருள்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

அவா்களிடம் தாலுகா காவல் ஆய்வாளா் கனகேசன் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் குமாரிடம் கூட்டமைப்பினா் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com