திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இதுவரை சாக்கடை கட்டுமான நடைபெறாததால் அங்குள்ள கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். ஆகவே, உடனே சாக்கடை கட்டும் பணியை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.