விழுப்புரத்தில் பட்டதாரி ஆசிரியா்களுக்கு காச நோய் குறித்த பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்வித் துறை சாா்பில் விழுப்புரம், இ.எஸ். கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 250 ஆசிரியா்கள் பங்கேற்றனா். உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா்.
முகாமில், விழுப்புரம் மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு துணை இயக்குநா் சுதாகா் கலந்து கொண்டு காச நோய் பரவும் முறைகள், தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சைகள் போன்றவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணன், மாவட்ட காச நோய் மருத்துவ அலுவலா் நேதாஜி, நலக் கல்வியாளா் கிருஷ்ணமூா்த்தி, முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் யூனஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.