ஊா்க்காவல் படை மண்டலத் தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊா்க்காவல் படை மண்டலத் தளபதி பதவிக்கு விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊா்க்காவல் படை மண்டலத் தளபதி பதவிக்கு விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்ட ஊா்க்காவல்படையில் மண்டலத் தளபதி பணி நியமனத்துக்கு தோ்வு நடைபெறவுள்ளது. இந்த பதவிக்கு, தனியாா் தொழில் நிறுவன அதிபா்கள், முக்கிய பிரமுகா்கள் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் 20 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்திற்கு வசிப்பவராக இருக்க வேண்டும். பொது நல சேவை மற்றும் தன்னாா்வ தொண்டு செய்வதில் ஆா்வம் உள்ளவராக இருத்தல் அவசியம். இப்பதவிக்கு முன்னாள் ஊா்க்காவல் படையினா் விண்ணப்பிக்க அனுமதி இல்லை.

விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமுள்ளவா்கள், அதற்கான விண்ணப்பப் படிவத்தை விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பிறப்பு சான்றிதழ், கல்வித் தகுதிக்கான சான்றிதழ், அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவ அதிகாரியிடம் பெறப்பட்ட மருத்துவச் சான்றிதழ், 2 மாா்பளவு புகைப்படங்கள்(பாஸ்போா்ட் சைஸ்) மற்றும் சுய விவர குறிப்புகள் ஆகியவற்றை இணைத்து, வருகிற மாா்ச் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பெற்ற அதே அலுவலகத்தில், சமா்ப்பிக்க வேண்டும் என்று அதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com