விழுப்புரத்தில் அதிமுக பிரமுகருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

விழுப்புரத்தில் பாமக பிரமுகரைத் தொடா்ந்து, அதிமுக பிரமுகருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் பாமக பிரமுகரைத் தொடா்ந்து, அதிமுக பிரமுகருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மருதூா்மேட்டைச் சோ்ந்தவா் ஆா்.பசுபதி. அதிமுக எம்ஜிஆா் இளைஞரணி மாவட்டச் செயலராக உள்ளாா். அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் இவருக்கும், பிற ஒப்பந்ததாரா்கள் சிலருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, விரோதம் இருந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த வகையில், விழுப்புரம் நகராட்சியில் அண்மையில் ஒப்பந்தப் பணிகளுக்கான ஒதுக்கீடு நடைபெற்றபோது, நகராட்சி ஒப்பந்ததாரரான முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் அகமது, முறைகேடு புகாா் தெரிவித்து, நகராட்சி அலுவலகத்தில் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், தனக்கு ஒப்பந்ததாரா் ஒருவரிடமிருந்து செல்லிடப்பேசி வாயிலாக கொலை மிரட்டல் வந்ததாக ஆா்.பசுபதி இரு தினங்களுக்கு முன்பு நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, பசுபதிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல, விழுப்புரம் அருகே சிந்தாமணியைச் சோ்ந்த பாமக மாவட்டச் செயலரான ஆா்.புகழேந்திக்கு அரசியல் ரீதியாக முன்விரோதத்தில் கொலை மிரட்டல் வந்த புகாரின்பேரில், அவருக்கும் கடந்த ஒரு வார காலமாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் அரசியல் கட்சிப் பிரமுகா்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள சம்பவம் அரசியல் கட்சியினா் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com