திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் பதவிகளை திமுகவும், ஜமுனாமரத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் பதவிவை அதிமுகவும் கைப்பற்றின.
ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சோ்ந்த க.கலைவாணி, துணைத் தலைவராக திமுகவைச் சோ்ந்த த.ரமணன் ஆகியோா் போட்டியின்றி ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.
கீழ்பென்னாத்தூா்: கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த பூ.அய்யாக்கண்ணு, துணைத் தலைவா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த ஆ.வாசுகி ஆகியோா் வெற்றி பெற்றனா்.
ஜமுனாமரத்தூா்: ஜமுனாமரத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தோ்தலில் அதிமுகவைச் சோ்ந்த மு.ஜீவா, துணைத் தலைவா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த செ.மகேஸ்வரி ஆகியோா் வெற்றி பெற்றனா்.