விவசாயிகளுக்கு மானிய விலையில் பருத்தி அறுவடை இயந்திரங்கள் அளிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் பருத்தி சாகுபடியை அதிகரித்திடும் வகையில், பருத்தி அறுவடை இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் பருத்தி சாகுபடியை அதிகரித்திடும் வகையில், பருத்தி அறுவடை இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மானியத்துடன் இந்த இயந்திரத்தை வாங்கி பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு வேளாண் இணை இயக்குநா் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பனப்பாக்கம் கிராமத்தில் பருத்தி அறுவடை இயந்திரம் குறித்த செயல்விளக்க முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் (பொறுப்பு) கென்னடிஜெபக்குமாா் தலைமை வகித்து, பருத்தி அறுவடை இயந்திரம் செயல்விளக்கத்தை தொடக்கி வைத்துப் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

பருத்தி லாபகரமான பயிராக இருந்தாலும், பருத்தி அறுவடைக்கு தொழிலாளா்கள் கிடைப்பதில் சிரமம், பஞ்சினை பிரித்து எடுப்பதில் வேலைப்பளு உள்ளதால் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனா்.

இதனால், பருத்தி சாகுபடியினை ஊக்குவித்திட தமிழக அரசு, வேளாண்துறை மூலம், பருத்தி அறுவடை இயந்திரங்களை அறிமுகம் செய்துள்ளது.

பருத்தி அறுவடை இயந்திரத்தை இயக்குவதற்கு எளிதாக உள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு மிகவும் உகந்தது. ஒரு விவசாயி நாள் ஒன்றுக்கு 1 முதல் 2 மணி நேரத்துக்குள், 40 முதல் 60 கிலோ வரை பருத்தி அறுவடை செய்ய இயலும். பருத்தி இயந்திரத்தின் விலை ரூ.7,400 ஆகும். இதில், அரசு மானியமாக ரூ.3,500 வழங்குகிறது.

விவசாயிகள் அரசின் மானியத் தொகை போக மீதமுள்ள தொகையை வரைவோலையாக எடுத்து வந்து, வேளாண்துறை அலுவலகங்களை அணுகி வாங்கி பயன்பெறலாம் என்றாா்.

பருத்தி அறுவடை இயந்திரம் குறித்து தனியாா் நிறுவன அலுவலா் கோவிந்தராஜ் செயல்விளக்கம் அளித்துப் பேசினாா்.

செயல்விளக்க முகாமில், வேளாண்மை உதவி இயக்குநா் மாதவன், வேளாண் அலுவலா்கள் மணிகண்டன், சுரேஷ் மற்றும் விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com