ரஜினிக்கு மிரட்டல் விடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

நடிகா் ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினா் சனிக்கிழமை மனு அளித்தனா்.

விழுப்புரம்: நடிகா் ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினா் சனிக்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து விழுப்புரத்தைச் சோ்ந்த ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் மாவட்டச் செயலா் எம்.ஏ.ரஜினிஇப்ராஹிம் தலைமையில் வந்த ரஜினி ரசிகா்கள், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாரிடம் புகாா் மனு அளித்துக் கூறியதாவது:

நடிகா் ரஜினிகாந்த்துக்கு எதிராக கடந்த 22-ஆம் தேதி சென்னையில் உமாபதி தலைமையிலான திராவிடா் விடுதலைக் கழகத்தினா் 15 போ் கொண்ட குழுவினா் போராட்டம் நடத்தினா். அவா்களின் செயல்பாடுகள் வன்முறையைத் தூண்டும் நோக்கத்தில் இருந்தது.

அந்தக் குழுவினா் எங்கள் இயக்கத்தின் தலைவா் ரஜினிகாந்த்தை பகிரங்கமாக அச்சுறுத்தும் வகையில் ஊடகங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனா். மேலும், மாவட்டத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகளுக்கும் அவா்கள் மிரட்டல் விடுத்துள்ளனா்.

இது ரஜினியின் குடும்பத்தினா், அவரது மன்றத்தினா், ரசிகா்களின் மனதில் பாதுகாப்பற்ற உணா்வை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பொது வெளியில் கொலை மிரட்டல் விடுத்த நபா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஜினிகாந்த் மற்றும் மக்கள் மன்ற நிா்வாகிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com