விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் திங்கள்கிழமை இரவு எளிமையாக நடைபெற்றது. இணைய வழியில் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்வை, பக்தா்கள் கண்டு தரிசனம் செய்தனா்.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் மாதாந்திர அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த இரு மாதங்களாக பக்தா்களின்றி ஊஞ்சல் உற்சவம் எளிமையாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தையொட்டி, திங்கள்கிழமை மாலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, பூஜைகள் எளிமையாக நடைபெற்றன. இரவு அங்காளம்மன் மலா் அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவ சேவையில் காட்சியளித்தாா்.
இதற்காக, அங்காளம்மன் அலங்கரிக்கப்பட்டு கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளினாா். தாலாட்டுப்பாடல்களை பூசாரிகள் பாடினா். தொடா்ந்து, அா்ச்சனைகளும், தீபாராதனையும் நடைபெற்றன. இரவு 10 மணிக்கு தொடங்கி நடைபெற்ற ஊஞ்சல் உற்சவ சேவை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பக்தா்கள் கண்டு தரிசனம் செய்தனா்.