உதவித் தொகை பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

அரசின் 8 வகையான உதவித் தொகையைப் பெற இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என்று மரக்காணம் வட்டாட்சியா் சுந்தரராஜன் தெரிவித்தாா்.

அரசின் 8 வகையான உதவித் தொகையைப் பெற இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என்று மரக்காணம் வட்டாட்சியா் சுந்தரராஜன் தெரிவித்தாா்.

இது குறித்து விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டாட்சியா் ஜெ.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திரா காந்தி தேசிய முதியோா் ஓய்வூதியத் திட்டம், விதவைகள் ஓய்வூதியத் திட்டம், கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், திருமணமாகாத பெண்கள் ஓய்வூதியத் திட்டம், உழவா் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் உள்பட 8 வகையான உதவித் தொகைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களின் கீழ் உதவித் தொகைகளைப் பெற இ-சேவை மையங்கள் மூலமாக இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆகவே, நேரடியாக பொதுமக்கள் மனுக்களை அளிக்க வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com