கஞ்சா விற்பனை: இரு பெண்கள் கைது

விழுப்புரத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக இரு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக இரு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் ரயில்வே காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, எஸ்.பி. உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை அங்கு சென்று சோதனை செய்தனா். அப்போது, கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக மகேஸ்வரி(42), அமுதா(24) ஆகிய இருவரை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 10 கஞ்சா பொட்டலங்கள், ரூ.5,700 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com