வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

செஞ்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் திருடப்பட்டது.

செஞ்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் திருடப்பட்டது.

மேல்மலையனூா் வட்டம், மேட்டுவையலாமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை, முன்னாள் ராணுவ வீரா் ஆவாா்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட இவா் கடந்த 27-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சேத்துப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றாா்.

பின்னா், புதன்கிழமை காலை வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்க 6 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சத்து 6 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் அவலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com