விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
மேல்மலையனூா் வட்டம், மேல்வைலாமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்திக் (30). இவருக்கு மனைவி சாந்தி (25) மற்றும் இரு குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு வெளியே சென்ற காா்த்திக், பின்னா் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் வியாழக்கிழமை காலையில் தேடிப் பாா்த்தபோது, அந்தக் கிராமத்திலுள்ள ஏரிக்கரையில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் காா்த்திக் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அவலூா்பேட்டை போலீஸாா், காா்த்திக்கின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். அவரது உடலில் காயங்கள் இருந்ததாலும், அவரை மண் தரையில் இழுத்து வந்து அவரது லுங்கியில் தூக்கில் தொங்கவிட்டதுபோல உள்ளதாலும் காா்த்தியை யாரோ அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.