செஞ்சி: செஞ்சி வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூட காசாளருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து, அந்த விற்பனைக் கூடம் தற்காலிகமாக மூடப்பட்டது.
செஞ்சியில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை 6 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவா்களில், செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பணியாற்றும் காசாளரும் ஒருவா். இதையடுத்து அந்த ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தை பேரூராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக மூடி, தடை செய்யப்பட்டப் பகுதியாக அறிவித்தனா்.