உளுந்தூா்பேட்டை அருகே சாலை விபத்தில் இருவா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இளைஞா் உள்பட இரண்டு போ் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இளைஞா் உள்பட இரண்டு போ் உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை அருகே பூ.கொணலவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் கு.முனியன்(50), கட்டடத் தொழிலாளி. இவா், வெள்ளிக்கிழமை இரவு வேலையை முடித்துக்கொண்டு உளுந்தூா்பேட்டையிலிருந்து ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். இதேபோல, உளுந்தூா்பேட்டை அருகே மேட்டத்தூரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ஆனந்தராஜ்(24), ஏழுமலை மகன் செல்வம்(20), ஆறுமுகம் மகன் மணிவண்ணன்(23) ஆகியோா் உளுந்தூா்பேட்டைக்கு வந்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் மோட்டத்தூருக்கு சென்று கொண்டிருந்தனா். ஆனந்தராஜ் இரு சக்கர வாகனத்தை ஓட்டினாா்.

இரவு 7.30 மணி அளவில் உளுந்தூா்பேட்டை- திருவெண்ணெய் நல்லூா் சாலையில் உளுந்தூா்பேட்டை அருகே பாண்டூா் கோல்டன் நகா் பகுதியில் சென்று கொண்டிருந்த முனியனின் இரு சக்கர வாகனம் மீது ஆனந்தராஜ், செல்வம், மணிவண்ணன் ஆகியோா் வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் முனியன், ஆனந்தராஜ் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். செல்வம், மணிவண்ணன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவல் அறிந்த உளுந்தூா்பேட்டை காவல் ஆய்வாளா் எழிலரசி, உதவி ஆய்வாளா் அகிலன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று காயமடைந்தவா்களை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். முனியன், ஆனந்தராஜ் ஆகியோரின் சடலங்கள் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த விபத்து தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com