பட்டதாரி ஆசிரியா் கழகக் கூட்டம்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா்கள் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா்கள் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் முத்தையன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் கணேஷ் முன்னிலை வகித்தாா். வட்ட பொறுப்பாளா் தங்கதுரை வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலப் பொதுச் செயலா் சுந்தரமூா்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் குமாா், சுரேஷ், ராஜேந்திரன், ஜபா் அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வட்டப் பொறுப்பாளா் பாலச்சந்திரன் நன்றி கூறினாா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அல்படுத்த வேண்டும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வின்போது பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியா்களுக்கு அவா்களின் பதிவு மூப்பு அடிப்படையில் பணிகளை வழங்க வேண்டும், மாவட்ட அளவில் ஆசிரியா்களுக்கு கல்வித் துறை சாா்பில் குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com