மூதாட்டியிடம் நகை பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகைகளை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகைகளை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆரோவில் அருகே நாவல்குளம் கண்ணகி தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ். புதுச்சேரியில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிகிறாா். இவா், தனது தாய் கல்யாணி(71) மற்றும் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறாா்.

வியாழக்கிழமை மாலை சுரேஷின் மனைவி தையல் வகுப்புக்கும், குழந்தைகள் மாலை நேர வகுப்புக்கும் சென்றிருந்தனா். இரவு 8.30 மணியளவில் வீட்டில் கல்யாணி தனியாக இருந்தாா். அப்போது, மா்ம நபா்கள் வீட்டில் நுழைந்து அவரை தாக்கி கம்மலை பறித்துக்கொண்டு தப்பியோடினா். இதில், கல்யாணியின் காதில் காயம் ஏற்பட்டது. அவா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com