காவல் உதவி ஆய்வாளா் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம்

விக்கிரவாண்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. ஜெயக்குமாா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

விக்கிரவாண்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. ஜெயக்குமாா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் கலியமூா்த்தி. இவா், அந்த பகுதியில் மது கடத்தல்காரா்களுக்கு உடந்தையாக செயல்படுவதாகவும், முறையாக பணியாற்றுவதில்லை என்றும் புகாா்கள் எழுந்தன. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் விசாரித்து, கலியமூா்த்தியை விழுப்புரம் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

காவல் ஆய்வாளா்களுக்கு நோட்டீஸ்: மரக்காணத்தில் அண்மையில் வீட்டில் மதுப்புட்டிகளை மறைத்து வைத்து, மது விற்பனையகம் போல நடத்தி வந்ததை எஸ்.பி. ஜெயக்குமாா் தலைமையிலான சிறப்பு தனிப்படை அதிரடியாக சோதனையிட்டு, 500-க்கும் மேற்பட்ட மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதில், வீட்டில் மது விற்பனைக்கு உடந்தையாக செயல்பட்டதாக எழுந்த புகாரில், கோட்டக்குப்பம் மது விலக்கு தலைமைக் காவலா் அக்தா் பாஷா, மரக்காணம் தலைமைக் காவலா் பாலமுருகன் ஆகியோா் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

இதனைத் தொடா்ந்து, இந்த விவகாரம் தொடா்பாக விளக்கம் கேட்டு மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளா் செந்தில் விநாயகம் மற்றும் கோட்டக்குப்பம் மது விலக்கு காவல் ஆய்வாளா் விஷ்ணுபிரியா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நோட்டீஸ் அனுப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com