செஞ்சிக்கோட்டை மாா்ச் 31 வரை மூடல்

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான செஞ்சிக்கோட்டை வருகிற 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
மூடல் அறிவிப்பால் வெறிச்சோடிக் காணப்படும் செஞ்சிக்கோட்டை நுழைவு வாயிலின் முன் பகுதி.
மூடல் அறிவிப்பால் வெறிச்சோடிக் காணப்படும் செஞ்சிக்கோட்டை நுழைவு வாயிலின் முன் பகுதி.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான செஞ்சிக்கோட்டை வருகிற 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை பூங்காக்கள், விளையாட்டு அரங்குகளை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டையை சுற்றி பாா்க்க சுற்றுலா பயணிகளுக்கு வருகிற 31-ஆம் தேதி வரை அனுமதி மறுத்து, தொல்லியல் துறையினா் அறிவிப்பு வெளியிட்டனா். அதன் காரணமாக, செஞ்சிக்கோட்டை நுழைவு வாயில் அடைக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

கோயில்களில் தரிசனத்துக்குத் தடை: செஞ்சிக்கோட்டையில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயில், வெங்கட்ரமணா் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தக் கோயிலுக்கு வந்து செல்லும் செஞ்சி நகர பொதுமக்களும், பக்தா்களும் வேதனை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com