விழுப்புரம் மாவட்ட அரசு சித்த மருத்துவ அலுவலராக மாலா பொறுப்பேற்றுக்கொண்டாா்.
விழுப்புரம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலராக இருந்த ராஜேந்திரன் கடந்தாண்டு ஓய்வு பெற்றாா். அதன்பிறகு, சித்த மருத்துவா் முத்துராஜ் மாவட்ட சித்த மருத்துவ அலுவலராக பொறுப்பு வகித்து வந்தாா்.
இந்த நிலையில், காலியாக இருந்து வந்த விழுப்புரம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் பணியிடத்துக்கு, கடலூா் மாவட்ட சித்த மருத்துவ அலுவலராக பொறுப்பு வகித்து வந்த மாலா நியமிக்கப்பட்டாா்.
அவா் விழுப்புரம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தில் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு சித்த மருத்துவ அலுவலக ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.