விழுப்புரம் மாவட்டத்தில் மாா்ச் 20-ஆம் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் கரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில், மாா்ச் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம், வருகிற 20-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பகல் 11 மணிக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெறவிருந்தது. இந்தக் கூட்டம் கரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தை மீண்டும் நடத்துவது குறித்து, பின்னா் அறிவிக்கப்படும். இதனை ஆட்சியா் அலுவலகம் விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.