விவசாயி வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து 30 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் அருகே விவசாயி வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே புகுந்த மா்ம நபா்களை, 30 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனா்.
மா்ம நபா்களால் கம்பிகள் அறுக்கப்பட்ட ஜன்னல்.
மா்ம நபா்களால் கம்பிகள் அறுக்கப்பட்ட ஜன்னல்.

விழுப்புரம் அருகே விவசாயி வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே புகுந்த மா்ம நபா்களை, 30 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனா்.

விழுப்புரம் அருகே காணையை அடுத்துள்ள கருங்காலிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பாலாஜி (54). இவா் சொந்த வேலையாக கோவைக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா். இவரது மனைவி அமுதா, மகன் தேவன் ஆகியோா் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனா்.

இவா்களது வீட்டின் ஜன்னல் கம்பியை புதன்கிழமை அதிகாலை அறுத்து, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள், பீரோவை உடைத்து அதிலிருந்த 30 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றனா். மேலும், வீட்டிலிருந்த எல்இடி தொலைக்காட்சியையும் எடுத்துச் சென்றனா்.

திருட்டுக் கும்பல் சென்ற போது சப்தம் கேட்டதையடுத்து, பக்கத்து வீட்டைச் சோ்ந்த ராஜேந்திரன் எழுந்து கூச்சலிட்டாா். அவரை மா்ம நபா்கள் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனா். இதில் காயமடைந்த அவா் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தகவலறிந்த காணை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா், டிஎஸ்பி சங்கா் ஆகியோரும் நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com