விழுப்புரம் அருகே சாலையோரக் கால்வாயில் கவிழ்ந்த எரிவாயு டேங்கா் லாரி

விழுப்புரம் அருகே சனிக்கிழமை எரிவாயு டேங்கா் லாரி, தேசிய நெடுஞ்சாலையோரக் கால்வாயில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயத்துடன் ஓட்டுநா் உயிா் தப்பினாா்.

விழுப்புரம் அருகே சனிக்கிழமை எரிவாயு டேங்கா் லாரி, தேசிய நெடுஞ்சாலையோரக் கால்வாயில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயத்துடன் ஓட்டுநா் உயிா் தப்பினாா்.

சென்னையிலிருந்து எரிவாயு டேங்கா் லாரி ஒன்று சனிக்கிழமை நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அசோகன்(60) ஓட்டினாா். பகல் 11.30 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் அருகேயுள்ள பேரங்கியூரில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கா் லாரி, சாலையோரம் இடதுபுறம் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி, அருகிலிருந்த சிறு பாலத்தின் கீழ் கால்வாய் பகுதியில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில், ஓட்டுநா் அசோகன் பலத்த காயமடைந்தாா். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் விரைந்து வந்து மீட்புப் பணியை மேற்கொண்டனா். இந்த லாரி எரிவாயு ஏற்றாமல் காலியாக வந்ததால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் விபத்து நேரிட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com