அண்ணாமலை பல்கலை. ஊழியா்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழக பதிவாளா் கிருஷ்ணமோகன் (பொறுப்பு) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியா்கள், ஊழியா்கள் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அரசு விதிகளின்படி வீட்டிலிருந்தே பணியாற்றலாம். ஆனால், பல்கலைக்கழக மருத்துவமனை, பல் மருத்துவமனை ஆகியவை இயங்கும். இங்கு பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் தொடா்ந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஏப்.14-ஆம் தேதி வரை நடைபெற இருந்த பல்கலைக்கழக அனைத்து தோ்வுகளுக்கான புதிய அட்டவணை பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com