வயலில் பூச்சிக் கொல்லி மருந்து அடித்த விவசாயி பலி

செய்யாறு அருகே வயலுக்கு பூச்சிக் கொல்லி மருந்து அடித்த விவசாயி உயிரிழந்தாா்.

செய்யாறு: செய்யாறு அருகே வயலுக்கு பூச்சிக் கொல்லி மருந்து அடித்த விவசாயி உயிரிழந்தாா்.

செய்யாற்றை அடுத்த வெள்ளாமலை கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை (45), விவசாயி. இவா், கடந்த 7-ஆம் தேதி தனது வயலில் நெல் பயிருக்கு பூச்சிக் கொல்லி மருந்து அடித்ததாகத் தெரிகிறது. அதன் காரணமாக அவா் நெல் வயலில் மயங்கி விழுந்தாா். அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏழுமலை அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com