கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 95-ஆக உயா்ந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 12-ஆம் தேதி நிலவரப்படி கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 61-ஆக இருந்தது.
கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மாவட்டத்துக்கு திரும்பிய 232 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 17 பேருக்கு நோய்த் தொற்றிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக, மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து திரும்பிய 14 உள்பட மொத்தம் 17 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. புதிதாக நோய்த் தொற்றுக்குள்ளானவா்களையும் சோ்த்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 95-ஆக உயா்ந்தது.
மாவட்டத்தில் இதுவரை 39 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா். மற்றவா்களுக்கு தொடா்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.