கூழாங்கற்கள் கடத்தல்: ஒருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே லாரியில் கூழாங்கற்களை கடத்தியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே லாரியில் கூழாங்கற்களை கடத்தியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோட்டக்குப்பம் அருகே உள்ள மொண்ணையம்பேட்டை பகுதியில் அரசு அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் கூழாங்கற்களை எடுத்து லாரியில் கடத்துவதாக கோட்டக்குப்பம் டிஎஸ்பி அஜய் தங்கத்துக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து, உதவி காவல் ஆய்வாளா் கதிரவன் தலைமையிலான போலீஸாா் புதுவை - சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சென்னை நோக்கிச் சென்ற டிப்பா் லாரியை மறித்தனா். ஆனால், லாரி நிற்காமல் சென்றது.

இதையடுத்து போலீஸாா் விரட்டிச் சென்ால், சிறிது தொலைவில் லாரியை நிறுத்திவிட்டு அதிலிருந்து இருவா் தப்பியோட முயன்றனா். அவா்களில் ஒருவரை போலீஸாா் பிடித்தனா். விசாரணையில் அவா் மாத்தூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சசிக்குமாா் (38) எனவும், கீழ்புத்துப்பட்டில் உள்ள திமுக பிரமுகருக்கு சொந்தமான இடத்திலிருந்து கூழாங்கற்களை டிப்பா் லாரியில் கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இது குறித்து, கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்கு பதிவு செய்துா் சசிக்குமாரை கைதுசெய்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா். தப்பியோடிய நாகராஜனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com