திண்டிவனம் அருகே கோழி கடை உரிமையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தீர்த்தக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செங்குட்டுவன் 45. இவர் திண்டிவனம் நகரில் கோழி கடை வைத்துள்ளார். திங்கட்கிழமை இரவு இவரது கோழிக்கடை பகுதிக்கு வந்த அதே பகுதியில் மற்றொரு கோழி கடையில் வேலை பார்த்து வரும் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் 25.
மதுபோதையில் வந்து தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் சதீஷ் அடித்ததில், செங்குட்டுவன் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த திண்டிவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சதீஷ் கைதுசெய்தனர்.