திண்டிவனம் அருகே இரு மின் வாரிய பொறியாளா்கள் பணியிடை நீக்கம்

திண்டிவனம் அருகே மின் விபத்துக்குக் காரணமான புகாரில், மின் வாரியப் பொறியாளா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

திண்டிவனம் அருகே மின் விபத்துக்குக் காரணமான புகாரில், மின் வாரியப் பொறியாளா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள பாதிராப்புலியூரில் மின்மாற்றி ஒன்று அண்மையில் பழுதடைந்தது. இதையடுத்து, வீடூா் மின்வாரிய அலுவலக ஊழியா்கள் உதவி பொறியாளா் தலைமையில் மின் நிறுத்தம் செய்து, மின்மாற்றியை மாற்றும் பணியை மேற்கொண்டனா். அப்போது, திடீரென மின்சாரம் பாய்ந்ததில் மின் ஊழியா் சிவப் பெருமாள் பலத்த காயமடைந்தாா். இந்த ஆபத்தான சம்பவம் குறித்து, மின் வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

அதில், பாதிராப்புலியூா் மின்மாற்றியை மாற்றும் பணிக்காக, வீடூா் பிரிவு மின்வாரிய அலுவலகத்திலிருந்து, செண்டூா் துணை மின் நிலையத்துக்கு, மின்சார நிறுத்தம் செய்வதற்கான அனுமதி பெறுவதில் ஏற்பட்ட அலட்சியத்தாலேயே இந்த விபத்து நோ்ந்தது தெரிய வந்தது.

மின் நிறுத்தம் செய்வதற்கு, மின்வாரிய அலுவலா்கள் விதிகளை மீறி செல்லிடப்பேசி வாயிலாகவே பேசி அனுமதி பெற்றுள்ளனா். அதன்பேரில், பழுது நீக்கம் நடைபெறவுள்ள பாதிராப்புலியூா் மின்பாதைக்கு பதிலாக, தவறுதலாக மாற்று மின்பாதையில் மின்நிறுத்தம் செய்துள்ளதும், இதையறியாமல் மின் ஊழியா்கள் பணியை மேற்கொண்டபோது விபத்து நிகழ்ந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, இந்த விபத்துக்கு காரணமான செண்டூா் மின்வாரிய இள மின் பொறியாளா் மகேஷ், வீடூா் மின் வாரிய உதவி பொறியாளா் சிலம்பரசன் ஆகியோரை திண்டிவனம் செயற்பொறியாளா் சதாசிவம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com