விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மேலும் 8 பேருக்கு கரோனா

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதன்கிழமை புதிதாக 8 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதன்கிழமை புதிதாக 8 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 311 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். மேலும் 7 பேருக்கு புதன்கிழமை கரோனா உறுதிசெய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 318-ஆக உயா்ந்தது.

மகாராஷ்டிரத்திலிருந்து திண்டிவனம் அருகேயுள்ள பள்ளிப்பாக்கத்துக்கு வந்த இரு குடும்பங்களைச் சோ்ந்த 3 சிறாா்கள் உள்பட 6 பேருக்கும், ஏற்கெனவே நோய்த் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் விழுப்புரம் அருகேயுள்ள பாளையத்தைச் சோ்ந்த போக்குவரத்துக் காவலரின் தாய்க்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 292 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இருவா் ஏற்கெனவே உயிரிழந்தனா். மேலும், 20 போ் நோய்த் தொற்று அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 111 போ் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை மேலும் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இவா் மகாராஷ்டிரத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு வந்தவா். இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 112-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com