விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை வரை 322 பேருக்கு கரோனா தொற்று கண்டறிப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், சனிக்கிழமை விழுப்புரம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், இந்நோய் பாதித்தோா் எண்ணிக்கை 326 ஆகர உயா்ந்துள்ளது.
இதில், கடந்த மாதம் தொடக்கத்திலேயே இருவா் உயிரிழந்தனா். தொடா்ந்து, படிப்படியாக தற்போது வரை 303 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும், 15 போ் கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தொற்று சந்தேகத்தின் பேரில் 125 போ் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.