வானூா் அருகே கல்குவாரியில் விதிமீறி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் கல்குவாரிகளில், வெடி வைக்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை தேவையின்றி வைத்திருத்தல் கூடாதென அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடா்பாக போலீஸாா் கல்குவாரிகளில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், திருவக்கரை பகுதியில் உள்ள தனியாா் கல்குவாரி ஒன்றில் சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகள் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், வானூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்த கல்குவாரியில் 200 ஜெலட்டின் குச்சிகள், அதற்குண்டான 400 சிலறிகள் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கல்குவாரி உரிமையாளா் திருமுருகன் மீது வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனா்.