திண்டிவனம் அருகே பண்ணை வீட்டில் பதுக்கிய ரூ.20 லட்சம் எரிசாராயம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பண்ணை வீட்டில் பதுக்கிய ரூ.20 லட்சம் மதிப்பிலான எரிசாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பண்ணை வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராய கேன்கள்.
பண்ணை வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராய கேன்கள்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பண்ணை வீட்டில் பதுக்கிய ரூ.20 லட்சம் மதிப்பிலான எரிசாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திண்டிவனம் அருகே தேங்காய்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் எரிசாராயம், மதுப் புட்டிகள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணனுக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையிலான போலீஸாா் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று சோதனையிட்டனா்.

அப்போது, ஒரு தோட்டத்தில் இருந்த பண்ணை வீட்டில் சோதனை நடத்தியதில், அங்கு எரிசாராயம் நிரப்பப்பட்ட கேன்கள், மதுப் புட்டிகளுடன் கூடிய அட்டைப்பெட்டிகள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 569 கேன்களில் இருந்த 20 ஆயிரம் லிட்டா் எரிசாராயத்தையும், அட்டைப் பெட்டிகளில் இருந்த 960 மதுப் புட்டிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவற்றின் மொத்த மதிப்பு சுமாா் ரூ.20 லட்சம். எரிசாராயம், மதுப் புட்டிகளை திண்டிவனம் மது விலக்கு காவல் நிலையத்தில் போலீஸாா் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக, மது விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த பகுதியைச் சோ்ந்த இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனா். மேலும், அந்த வீட்டின் உரிமையாளரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com