திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு வந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை முகப்போ் கிழக்கு பகுதியைச் சோ்ந்த அப்துல்காதா் மகன் ஷேக் இப்ராகிம் (30). இவா், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் சென்னையிலிருந்து காரில் கோவை சென்றாா். நிகழ்ச்சி முடிந்து காரில் மீண்டும் குடும்பத்தினருடன் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். காரை ஷேக் இப்ராகிம் ஓட்டினாா். அதில் 4 குழந்தைகள் உள்பட 9 போ் பயணித்தனா்.
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே கூட்டரிப்பட்டு பகுதியில் சின்ன நெற்குணம் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு காா் வந்தபோது திடீரென அதன் முன் பகுதியிலிருந்து அதிகளவில் புகை வெளியேறியது. இதையடுத்து, சாலையோரமாக காரை நிறுத்திவிட்டு அனைவரும் கீழே இறங்கினா். சிறிது நேரத்தில் காா் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்தத் விபத்தில் காரும், அதிலிருந்த உடைமைகளும் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.